சினிமா
80 கிலோ எடை.. 6 வாரங்களாக படுத்த படுக்கையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்.. என்ன ஆச்சு?

80 கிலோ எடை.. 6 வாரங்களாக படுத்த படுக்கையாக இருக்கும் ரகுல் ப்ரீத் சிங்.. என்ன ஆச்சு?
இந்தி, தமிழ், தெலுங்கு சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ரகுல் ப்ரீத் சிங். இந்தி சினிமாவில் பிசியாக நடித்து வரும் இவர் தெலுங்கு மற்றும் தமிழ் படங்களிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். கமல் ஹாசன் நடிப்பில் வெளியான “இந்தியன் 2” படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. உடல் எடையை கட்டுக்கோப்பாக வைப்பதிலும், உடற்பயிற்சி செய்வதிலும் அதிக அக்கறை காட்டி வருபவர் ரகுல். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அடிக்கடி தனது ஜிம் ஒர்க்அவுட் வீடியோக்களை பதிவேற்றி வருபவர்.
அந்த வகையில் சமீபத்தில் அவர் செய்த உடற்பயிற்சி அவருக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்தில் ஜிம்மில் உடற்பயிற்சி செய்த ரகுல், 80 கிலோ எடை கொண்ட வெயிட்லிப்டை தூக்கியுள்ளார். இதில் அவருக்கு முதுகு பிடிப்பு ஏற்பட, அதில் இருந்து மீள முடியாமல் கடந்த 6 வாரமாக தவித்து வருகிறார்.
இந்த சம்பவம் நடந்தபோதே தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்த ரகுல், “நான் செய்த முட்டாள் தனமான தவறு இன்று எனக்கு பயங்கரமான பின்விளைவை ஏற்படுத்தியுள்ளது. அதிவிரைவில் நான் குணமடைய வேண்டும். ஒரே இடத்தில் தன்னம்பிக்கை இழந்து ஓய்வெடுப்பது எனக்கு எளிதான விஷயம் அல்ல. ஆனால் இதன் மூலம் எனது வாழ்க்கையில் முக்கியமான பாடம் ஒன்றை கற்றுக்கொண்டேன்” என்று கூறியிருந்தார்.
முதலில் ஒரு வாரத்தில் குணமடையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது ஆறு வாரங்களை கடந்தும் ரகுல் குணமடையவில்லை. இதனால், கடந்த ஆறு வாரமாக படுத்த படுக்கையாகவே இருந்து வருகிறார்.
இது தொடர்பாக தற்போது பேசியுள்ள ரகுல், “முதுகு பிடிப்பு ஏற்பட்டதை பொருட்படுத்தாமல், உடற்பயிற்சி செய்து முடித்துவிட்டு படப்பிடிப்புக்கு சென்றுவிட்டேன். அங்கு முதுகு வலி மிகவும் அதிகமானது.
அந்த வலியால் துடிதுடித்து போனேன். என் உடலின் கீழ் பகுதி என்னை விட்டு தனியாக பிரிந்தது போல் வலி அது. நான் இன்னும் 100 சதவீதம் குணமாகவில்லை. இன்னும் ஒரு சில வாரங்களில் குணமாவேன்” என்று தெரிவித்துள்ளார்.