Connect with us

சினிமா

“ஏ.ஆர்.ரஹ்மான் நல்ல மனிதர்”..விவாகரத்து குறித்து சாய்ரா விளக்கம்!

Published

on

Loading

“ஏ.ஆர்.ரஹ்மான் நல்ல மனிதர்”..விவாகரத்து குறித்து சாய்ரா விளக்கம்!

இவர்களுக்குள் இப்படியா? என்கிற வகையில் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது என்றால் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுடைய விவாகரத்து தான். 29 வருடங்கள் அவர் சாய்ரா பானுவுடன் வாழ்ந்து வந்த நிலையில், தாங்கள் பிரிவதாக சுமூகமாக முடிவெடுத்து தங்களுடைய சமூக வலைத்தள பக்கங்களில் அறிவித்திருந்தார்கள்.

Advertisement

பொதுவாகவே விவாகரத்து செய்தி வந்துவிட்டது என்றாலே அந்த பிரபலங்களுடைய விவாகரத்துக்கு இது தான் காரணம் என்கிற தகவல் உலாவும். அப்படி தான் ஏ.ஆர்.ரஹ்மான் விவாகரத்து செய்தி குறித்தும் பல வகையான கதைகள் பரவி கொண்டு இருந்தது. தன்னுடைய தந்தை மீது அவதூறு பரப்பவேண்டாம் என ஏ.ஆர்.ரஹ்மான் பிள்ளைகளும் தெரிவித்தும் இருந்தார்கள்.

இந்த சூழலில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானை பிரிவது ஏன் என்று அவரது மனைவி சாய்ரா பானு விளக்கம் அளித்து ஏ.ஆர்.ரஹ்மான் மீது அவதூறு பரப்பவேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளார். இது குறித்து ஆடியோ பேசி அதனை வெளியிட்டுள்ள அவர் ” நான் இப்போது இந்தியாவில் இல்லை. எனக்கு கடந்த 2 மாதங்களாக உடல்நிலை சரியில்லை என்பதால் மும்பையில் தங்கி சிகிச்சை பெற்று வருகிறேன்.

சிகிச்சைக்காக தொடர்ந்து மும்பையில் தங்க வேண்டிய சூழ்நிலை காரணமாக ரஹ்மானை பிரிந்து செல்கிறேன். எங்களுடைய விவாகரத்துக்கு இது தான் காரணம் மற்றபடி எங்களுடைய விவாகரத்துக்கு இது தான் காரணம் என பரவும் தகவல் உண்மை இல்லை. எங்களுடைய  ஏ.ஆர்.ரஹ்மான் மீது அவதூறு பரப்பாதீர்கள். அவர் அற்புதமான மனிதர்” என சாய்ரா பானு விளக்கம் அளித்துள்ளார். 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன