Connect with us

உலகம்

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரை சந்தித்த விஜித ஹேரத்!

Published

on

Loading

ஜெனீவாவில் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகரை சந்தித்த விஜித ஹேரத்!

ஜெனீவாவில் நடைபெற்று வரும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் பங்கேற்றுள்ள வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், நேற்றைய தினம் ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்தச் சந்திப்பின் போது, உயர் ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து சமர்ப்பித்த அறிக்கை தொடர்பாக விரிவாக விவாதிக்கப்பட்டது.

Advertisement

அமைச்சர் விஜித ஹேரத், அந்த அறிக்கை தொடர்பான இலங்கையின் நிலைப்பாட்டை விரிவாக எடுத்துரைத்தார்.

கடந்த ஜூன் மாதம் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட உயர் ஸ்தானிகர், புதிய அரசாங்கத்தின் கீழ் மனித உரிமைகளைப் பாதுகாப்பதில் ஒரு புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளதாக நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த கால மனித உரிமை மீறல்கள் குறித்து சுயாதீன விசாரணைகளை நடத்தி,பொறுப்புக்கூறல் பொறிமுறையை முறையாக நிறுவுவதற்கான இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது என்று வோல்கர் டேர்க் வலியுறுத்தினார்.

Advertisement

மேலும் இந்தச் சந்திப்பு, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை எதிர்கொள்ளும் சவால்களையும், புதிய அரசாங்கம் சர்வதேச சமூகத்துடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறது.[ஒ]

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன