Connect with us

சினிமா

கங்குவா படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்!

Published

on

Loading

கங்குவா படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்!

பிரமாண்ட பட்ஜெட்டில் படம் எடுத்தால் மட்டும் போதாது அதற்கு ஏற்றவாறு படத்தினை ப்ரோமோஷன் செய்யவேண்டும் என்பதை எடுத்துக்கட்டிக்கொண்டு இருக்கிறது கங்குவா படக்குழு. ஏனென்றால், படம் வரும் நவம்பர் 14-ஆம் திகதி தான் வெளியாகிறது. ஆனால், ஒரு மாதத்திற்கு முன்பில் இருந்தே படத்தினை டெல்லி, மும்பை, சென்னை எனப் பல இடங்களில் விழாக்கள் நடத்திப் படத்தினை ப்ரோமோஷன் செய்து வருகிறார்கள்.

Advertisement

படத்தை இந்த அளவுக்கு ப்ரோமோஷன் செய்த காரணத்தால் தான் படத்தின் மீது இந்த அளவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது என்று கூடச் சொல்லலாம். இந்த நிலையில், தற்போது தெலுங்கில் படத்தை இதுவரை இல்லாத அளவுக்கு எதிர்பார்ப்பை அதிகப்படுத்த கங்குவா படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா திட்டம்போட்டு பெரிய விஷயத்தைச் செய்துள்ளார் . அது என்னவென்றால், கங்குவா படக்குழு இன்று ஹைதராபாத்தில் நடைபெறும் ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவுள்ளார்கள்.

இந்த ப்ரோமோஷன் நிகழ்ச்சியில் கங்குவா படக்குழு மட்டுமின்றி இந்திய சினிமாவின் பெரிய இயக்குநராக இருக்கும் ராஜமௌலியையும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது. அவர் வருகை தந்து படத்தைப் பற்றிப் பேசினார் என்றால் நிச்சயக்கமாக தெலுங்கிலும் படத்திற்குக் கண்டிப்பாக ஒரு பெரிய ப்ரோமோஷனாக அமையும் என கூறப்படுகிறது. இதன் காரணமாகத் தான் தயாரிப்பாளரும் இந்த திட்டத்தைப் போட்டுள்ளார்.

மொத்தமாக இரண்டு பாகங்களைச் சேர்த்து 350 கோடிகளுக்கு மேல் இந்த படம் எடுக்கப்பட்டு வரும் காரணத்தால் இந்த அளவுக்குத் தீவிரமாக ப்ரமோஷன் செய்யப்பட்டு வருகிறது. மேலும், மொத்தமாக உலகம் முழுவதும் 11,000 திரையரங்குகளுக்கு மேல் வெளியாகவுள்ளது. விரைவில் படத்திற்கான இரண்டாவது ட்ரைலரையும் படக்குழு வெளியிடத் திட்டமிட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன