Connect with us

இலங்கை

யுவதியின் ஏ.டி.எம் அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு செய்த நபர் !

Published

on

Loading

யுவதியின் ஏ.டி.எம் அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு செய்த நபர் !

யுவதி ஒருவரின் ஏ.டி.எம் அட்டையைத் திருடி மதுபானம் கொள்வனவு செய்த சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெலிகம பொலிஸார் தெரிவித்தனர்.

மாத்தறை, வெலிகம பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கும்பல்கம பிரதேசத்தைச் சேர்ந்த யுவதி ஒருவர் தனது அலுவலகத்திலிருந்து வீட்டுக்குச் சென்று கொண்டிருக்கும் போது வங்கியின் ஏ.டி.எம் அட்டையிலிருந்து 18,200 ரூபாவுக்கு பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக யுவதியின் தொலைபேசி இலக்கத்திற்குக் குறுஞ்செய்தி கிடைத்துள்ளது.

Advertisement

தனது ஏ.டி.எம் அட்டை திருடப்பட்டுள்ளதை அறிந்து கொண்ட யுவதி வங்கியின் பணியாளர்களுடன் தொடர்பு கொண்ட போது சந்தேக நபர் ஏ.டி.எம் அட்டையைப் பயன்படுத்தி மதுபானம் கொள்வனவு செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன