Connect with us

விநோதம்

இதயத்திற்கு நலன் தரும் பாதாம்… குளிர் காலத்தில் எப்படி சாப்பிடலாம்?

Published

on

Loading

இதயத்திற்கு நலன் தரும் பாதாம்… குளிர் காலத்தில் எப்படி சாப்பிடலாம்?

தற்போது நாடு முழுவதும் குளிர்காலம் துவங்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் கடும் குளிர் விழ ஆரம்பித்துள்ளது. இந்த குளிர்காலத்தில் நாம் பல்வேறு வகையான பருப்புகள் அல்லது உலர் பழங்களை சாப்பிடுகிறோம். ஏனெனில் அவை நம் உடலுக்கு மிகவும் நன்மை தரும்.

இந்த முக்கியமான பருப்புகளில் ஒன்று பாதாம். பாதாம் சாப்பிடுவதால் நமது உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். இது குறித்து ஊட்டச்சத்து நிபுணர் மஞ்சு மாதல்கர் பல்வேறு தகவல்களை அளித்துள்ளார்.

Advertisement

குளிர்காலத்தில் அனைவரும் பாதாம் பருப்பை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் பாதாம் உடலில் ஆற்றலை உருவாக்குகிறது. ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கு குறைந்தது நான்கைந்து பாதாம் சாப்பிட வேண்டும். இந்த பாதாமை ஊறவைத்தோ அல்லது ஊற வைக்காமலோ சாப்பிடலாம். பாதாமில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளன. இதனுடன், பொட்டாசியம், மெக்னீசியம் ஆகியவை இதில் உள்ளன, இவை நம் உடலுக்கு நன்மை தரும்.

மேலும், இதய கோளாறு உள்ளவர்கள் பாதாம் பருப்பை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். இது அதிக ஆற்றலை வழங்குவதுடன் இதயத்திற்கும் நல்லது. இதை தவிர்த்து, பாதாமை பல்வேறு வழிகளில் எடுத்துக் கொள்ளலாம். நேரடியாக சாப்பிட முடியாத குழந்தைகளுககு பொடியாக இடித்து பாலுடன் கலந்து கொடுக்கலாம்.

பாதாம் பாலில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் குழந்தைகளுக்கு அவர்களின் வளர்ச்சிக்கு நல்லது. அதே சமயம் எலும்புகளும் வலுவடையும். பாவால் நமக்கு நிறைய நன்மைகள் கிடைக்கும். இதனால் முடிந்தவரை இந்த குளிர்காலத்தில் பாதாம் பருப்புகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன