Connect with us

உலகம்

இந்தியாவின் வாக்கு எண்ணும் முறையை பாராட்டிய எலான் மஸ்க்!

Published

on

Loading

இந்தியாவின் வாக்கு எண்ணும் முறையை பாராட்டிய எலான் மஸ்க்!

அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 5-ம் திகதி நடந்தது. இதில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டிரம்ப் வெற்றி பெற்றார்.

இதற்கிடையே அமெரிக்காவில் அதிக மக்கள் தொகை கொண்ட (3.9 கோடி பேர்) கலிபோர்னியா மாகாணத்தில் செனட் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் மைக்கேல் ஸ்டீல், ஜனநாயகக் கட்சி சார்பில் டெரெக் டிரான் போட்டியிட்டனர்.

Advertisement

தேர்தல் நடந்து 2 வாரங்களுக்கு மேலாகியும் வெற்றியாளர் முடிவு செய்யப்படவில்லை.  இன்னும் 3 லட்சம் வாக்கு எண்ணப்பட வேண்டும்.

இது குறித்து, எலான் மஸ்க் சமூகவலைதளத்தில் கூறும்போது, இந்தியாவில் ஒரே நாளில் 64 கோடி ஓட்டுகள் எண்ணி முடிக்கப்பட்டு விட்டன.

கலிபோர்னியாவில் இன்னும் எண்ணப்படுகின்றன என்று தெரிவித்து உள்ளார்.

Advertisement

கலிபோர்னியாவில் அதிகளவில் தபால் ஓட்டுகள் பதிவானது. இதில் அந்த ஓட்டுச்சீட்டை அனுப்பியது உண்மையான வாக்காளர்தானா என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்த வேண்டும்.

ஒவ்வொரு தபால் வாக்குச் சீட்டும் தனிப்பட்ட சரிபார்ப்புக்கு உட்படுத்தப்பட வேண்டும். இதனால் முடிவு அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன