Connect with us

விநோதம்

இந்த பழக்கங்கள் இருக்கா வாழ்க்கையே அழிந்துவிடும் ஜாக்கிரதை!

Published

on

Loading

இந்த பழக்கங்கள் இருக்கா வாழ்க்கையே அழிந்துவிடும் ஜாக்கிரதை!

(இன்று ஒரு தகவல்)

பண்டைய காலத்தில் இந்தியாவின் புகழ்பெற்ற அறிஞர், ஒரு சிறந்த இராஜதந்திரி மற்றும் ஒரு தலைசிறந்த பொருளாதார நிபுணராக திகழ்ந்து உலகம் முமுவதும் பிரபல்யம் அடைந்தவர் தான் சாணக்கியர்.

Advertisement

இவர்களின் கொள்கைகளுக்கு உலகம் முழுவதிலும் இன்றளவும் மவுசு குறையவே இல்லை. இவர் தனது வாழ்க்கையில் கடைப்பிடித்த பல்வேறு விடயங்கள் மற்றும் வாழ்க்கையில் சந்தித்த சவால்கள் மற்றும் அனுபவங்களின் தொகுப்பே சாணக்கிய நீதி.

சாணக்கிய நீதியை பின்பற்றியவர்கள் இன்றும் பின்பற்றுபவர்கள் என ஏறாளம் போர் இருக்கின்றனர். வாழ்வில் வெற்றியடைந்த பலபேருக்கு இது ஒரு வழிக்காட்டியாக இருந்துள்ளது. 

சாணக்கிய நீதியின் அடிப்படையில் ஒரு மனிதன் வாழ்கையை அழிக்க கூடிய ஆற்றல் கொண்ட பழக்கங்கள் தொடர்பில் இந்த பதிவில் முழுமையாக பார்க்கலாம்.

Advertisement

சாணக்கிய நீதியின் அடிப்படையில் தீய செயல்களின் மூலம் பணம் ஈட்டுபவர்களின்  செல்வம் நீண்ட காலத்துக்கு நிலைக்காது. அப்படிப்பட்ட மனிதர்களை  சுற்றி எப்போதும் பிரச்சினைகள் இருந்துக்கொண்டே தான் இருக்கும்.

இவர்கள் சம்பாதிக்கும் பணத்தை அற்ப காரியங்களுக்காக அதிகம் செலவு செய்வார்கள். இதனால் இவர்கள் வாழ்க்கையில் பெரிய ஆபத்துகளை சந்திக்க நேரிடும். இதுவே இவர்கள் வாழ்க்கை அழிவதற்கு காரணமாக அமையும். 

சாணக்கியரின் கூற்றுப்படி அதிக நேரம் தூங்கும் பழக்கத்தை கொண்டவர்களுக்கு  லட்சுமி தேவியின் ஆசி ஒருபோதும் கிடைக்காது. சூரியன் உதிக்கும் வரையில் தூங்கும் பழக்கம் கொண்டவர்களுக்கு வாழ்க்கையில் வறுமை இருந்துக்கொண்டே இருக்கும். இந்த பழக்கம் வாழ்க்கையை அழிவை நோக்கி கொண்டு செல்லும். 

Advertisement

வாழ்வில் அனைத்துமே அளவுடன் இருக்க வேண்டும்  ‘அளவிற்கு விஞ்சினால் அமிர்தமும் நஞ்சு’ என்பார்கள் அது போல் தேவைக்கு அதிகமாக சாப்பிடும் பழக்கம் கொண்டவர்கள் விரைவில் ஏழையாக மாறுவார்கள்.

இந்த பழக்கம் சோம்பேறித்தனத்துக்கும் வித்திடும். இந்த பழக்கம் கொண்டவர்கள் வாழ்வில் எதிர்காலத்தில் அதிக துன்பங்களை சந்திக்க நேரிடும். 

மனிதர்களை பொருத்தவரையில் பேச்சு மிகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. பேச்சினால் பிரச்சினைகளை உருவாக்கவும் முடியும், பிரச்சினைகளை தீர்க்கவும் முடியும்.

Advertisement

எனவே பேச்சில் நிதானம் அவசியம். பேச்சில் கட்டுப்பாடில்லாதவர்களுடனும், எப்போதும் கடுமையான வார்த்தைகளை பேசுபவர்களுடனும் லக்ஷ்மி தேவியின் ஆசீர்வாதம் இருக்காது.

மற்றவர்களை புண்படுத்தும் வகையில் பேசும் பழக்கம் கொண்டவர்களின் வாழ்க்கை ஒரு போதும் மகிழ்சியாக இருக்காது  இது அவர்களின் வாழ்க்கையையே அழித்துவிடும் ஆற்றல் கொண்டது. 

இந்த பழக்கங்கள் இருந்தால் உடனடியாக மாற்றிக்கொள்ள முயற்ச்சி செய்யுங்கள்.  (ப)
 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன