இலங்கை
கிளி. மாவட்ட செயலகத்தில் சர்வதேச சிறுவர் தினம் முன்னெடுப்பு!

கிளி. மாவட்ட செயலகத்தில் சர்வதேச சிறுவர் தினம் முன்னெடுப்பு!
கிளிநொச்சி மாவட்ட செயலகமும் கிளிநொச்சி மாவட்ட சிறுவர் சபையும் இணைந்து நடாத்திய சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று புதன்கிழமை(23) காலை மாவட்ட மேலதிக மாவட்ட செயலர்(காணி) திருமதி. நளாயினி இன்பராஜ் தலைமையில்
மாவட்ட செயலக திறன் விருத்தி மண்டபத்தில் இடம்பெற்றது.
நிகழ்வின் பிரதம விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட பிராந்திய சுகாதாரசேவைகள் பணிப்பாளர் மருத்துவர் தர்மராஜன் வினோதனும் சிறப்பு விருந்தினர்களாக மாவட்ட சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பிரிவின் நிலையப்பொறுப்பதிகாரி லக்மாலி குலசேகரவும் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில், சிறுவர்களின் கலைநிகழ்வுகள் இடம்பெற்றதோடு சிறுவர்களுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
மேலும் நிகழ்வில், கிளிநொச்சி தெற்கு கல்வி வலய முன்பள்ளி உதவிக்கல்விப்பணிப்பாளர் கந்தையா யுவராசா, கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தின் முன்பள்ளி உதவிக் கல்விப்பணிப்பாளர் பொன்னம் பலம் விஜயநாதன் மற்றும் முன்ன்பள்ளி ஆசிரியர்கள், மாண்வர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். (ச)