இலங்கை
பூநகரியில் கேரள கஞ்சா மீட்பு!

பூநகரியில் கேரள கஞ்சா மீட்பு!
கிளிநொச்சி பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று அதிகாலை 80கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளதாக அப்பகுதிப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கஞ்சா கடத்தல் தொடர்பில் இராணுவ புலனாய்வு பிரிவிற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சிறப்பு அதிரடி படையினருடன் இணைந்து சுற்றிவளைக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த கிலோகிராம் நிறையுடைய கஞ்சாவை மீட்டு நீதிமன்றில் ஒப்படைக்க பொலிஸார் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். (ச)