இலங்கை
யாழில் இருவர் கைது!

யாழில் இருவர் கைது!
அம்மன் கோயில் தட்டாதெருவுக்கு அன்மையில் உள்ள மருத்துவர் ஒருவரின் விட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளின் பின்டிக்கியை உடைத்து பணத்தினை திருடி சென்ற இருவரை கண்காணிப்புக்கமராவின் உதவியுடன் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினர் அரசடி நல்லூர் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
கைதுசெய்யப்பட்டவர்கள் குறித்த பணத்தில் 10போதை மாத்திரையும் 240மில்லிகிராம் ஹெரோயின் போதை பொருளை வாங்கியதாகவும் இவர்கள் போதைப் பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களுக்கு எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு பதிவுசெய்து முன்னிலைப்படுத்தப்படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.