இலங்கை
பாலத்தினை புனரமைக்குமாறு கோரிக்கை..!

பாலத்தினை புனரமைக்குமாறு கோரிக்கை..!
முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் உள்ள வட்டுவாகள் பாலம் மற்றும் புளியம்பொக்கனை பாலம் ஆகிய இரு பாலங்களும் பல ஆண்டுகளாக புனரமைக்கப்படாது ஆபத்தான நிலையில் காணப்படுவதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புக்களும் இடம்பெற்று வருகின்றன.
முல்லைத்தீவு பரந்தன் ஏ 35 வீதியில் மிக நீண்ட காலமாக காணப்படும் வட்டுவாகல் பாலம் கடந்த 2009 ஆம் ஆண்டுக்கு முன்னரான யுத்தம் மற்றும் 2004 ஆம் ஆண்டுக்கான ஆழிப்பேரலை என்பவற்றால் கடுமையாக சேதத்துக்கு உள்ளாகி தற்போது குறித்த பாலம் சிறுசிறு திருத்த வேலைகள் செய்யப்பட்டு போக்குவரத்துக்கு பயன்படுத்தப்பட்டது.
குறித்த பாலத்தின் தொடர் பணிகளின் அவசியம் குறித்து கடந்த 2013ஆம் ஆண்டு முதல் முல்லைதீவு மாவட்டத்தில் நடைபெறுகின்ற மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டங்கள் மற்றும் மாகாண சபை ஆகியவற்றில் நடந்த கலந்துரையாடல்களிலும் இந்த பாலத்தின் அவசியம் பற்றி கோரிக்கை கொடுக்கப்பட்டிருந்தது.
கடந்த ஆண்டில் கடந்த காலங்களில் அதற்கான அமைச்சரவை தீர்மானங்களும் கொண்டுவரப்பட்டு அதற்கான முயற்சி எடுப்பதற்கான எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
இவ்வாறான நிலையில் குறித்த பாலத்தின் பல இடங்களில் உடைவுகள் ஏற்பட்டு ஆபத்தான நிலையில் காணப்படுகின்றது.
இதனால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதுடன் உயிரிழப்புகளும் இடம்பெற்று வருகின்றன
இடம் பெற்று பலர் காயங்களுக்கு உள்ளாகி இருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று குறித்த வீதியில் வெளிநாட்சி புளியம்பொக்கனை சந்திக்கு அனுமதித்த பகுதியில் உள்ள பாலமானது.
கடந்த 2021 ஆம் ஆண்டில் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு அதன் தொடர் பணிகளும் இன்று வரை நிறைவடையாமல் காணப்படுகின்றது.
இவ்வாறான குறித்த பாலத்தடியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன குறிப்பாக தற்காலிக பாலத்தின் இரு பகுதிகளிலும் 15 க்கும் மேற்பட்ட விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதுடன் இரண்டு உயிரிழப்புக்களும் நிகழ்ந்துள்ளன.
ஏ9 வீதிக்கு அடுத்தபடியாகவும் போக்குவரத்து பாதையாகவும் வடக்கு மாகாணத்தையும் கிழக்கு மாகாணத்தையும் இணைக்கும் போக்குவரத்து பாதையாகவும் உள்ள பாதையை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. (ப)