Connect with us

இலங்கை

முல்லைத்தீவில் பத்து மணிவரை 23.23 வீதமான வாக்குபதிவு!!

Published

on

Loading

முல்லைத்தீவில் பத்து மணிவரை 23.23 வீதமான வாக்குபதிவு!!

முல்லைத்தீவு மாவட்டத்தில் காலை 10மணி வரை 23.23%  வீதமான வாக்குகள்  பதிவாகியுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட செயலரும் உதவி தெரிவித்தாட்சி  அலுவலருமான அ. உமாமகேஸ்வரன் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்; காலை 7மணிக்கு ஆரம்பமாகிய நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்களிப்பு முல்லைத்தீவு மாவட்டத்தில் அமைதியான முறையில் இடம்பெற்று வருகிறது.

Advertisement

முல்லைத்தீவு மாவட்டத்தில் 137 வாக்களிப்பு நிலையங்களிலும் வாக்களிப்பு இடம்பெற்று வருகிறது. முல்லைத்தீவு மாவட்டத்தில் 86,889 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள். அதில் 3,947 பேர் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதிபெற்றுள்ளார்கள். காலை 10 மணி வரை 19, 271 வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 23.23% வீதமான வாக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டத்தை பொறுத்தவரை மக்கள் ஓரளவு ஆர்வமாக வாக்களித்து வருவதை அவதானிக்க கூடியதாக உள்ளது. 

முல்லைத்தீவு மாவட்டத்தில் பல்வேறு பிரதேசங்களில் இருந்தும் தேர்தல் சுவரொட்டிகள் நீக்கப்படாமை தொடர்பில் முறைப்பாடுகள் வந்துள்ளதாகவும் அவற்றை உடனுக்குடன் முறைப்பாடு பிரிவு ஊடாக பொலிஸாரின் உதவியுடன் அவற்றை நீக்குவதாகவும் தெரிவித்தார். (ச)

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன