இலங்கை
இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் உயிரிழப்பு!

இலங்கையில் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் உயிரிழப்பு!
நாட்டில் அதிகளவில் உயிரைமாய்த்துக்கொள்பவர்கள் ஐஸ் மற்றும் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த மூன்று மாதங்களில் கம்பஹா மாவட்டத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவர்கள் அனைவரும் 16 மற்றும் 65 வயதிற்கு இடைப்பட்டவர்கள் எனவும்
இவர்களில் 4 பேர் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் எனவும்
மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் பயன்பாடானது உடல் ஆற்றலை அதிகரிப்பதுடன்
குழப்பம், பதற்றம், விரைவான இதயத்துடிப்பு உள்ளிட்ட உடல் நலப்பாதிப்புகளை ஏற்படுத்துவதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
மேலும் தூக்கமின்மை, நினைவாற்றல் இழப்பு உள்ளிட்ட உடல் நலப்பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றமையால் இவ்வாறான உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[ஒ]