Connect with us

இந்தியா

வீதியில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லொறி மோதி ஐவர் சாவு!

Published

on

Loading

வீதியில் உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது லொறி மோதி ஐவர் சாவு!

கேரள மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நாட்டிகை பகுதியில் நெடுஞ்சாலைசாலை பணிகள் நடைபெற்று வருவதன் காரணமாக அவ்வழியாக வரும் வாகனங்கள் மாற்று பாதையில் திருப்பிவிடப்பட்டுள்ளன. விதி புணரமைப்பு பணி நடைபெறும் பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்தன. 
இவ்வாறு வீதியோரத்தில் தடுப்புகள் அமைக்கப்பட்டு இருந்த பகுதியில் தமிழகத்தை சேர்ந்த 10க்கும் மேற்பட்டோர் உறங்கிக்கொண்டிருந்தனர்.
அப்போது மரக்கட்டைகளை ஏற்றிச் சென்ற லொறி ஒன்று, தடுப்புகளை உடைத்துக்கொண்டு உறங்கிக்கொண்டிருந்தவர்கள் மீது ஏற்றி விபத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்த கோர விபத்தில் 2 குழந்தைகள் உட்பட 5 தமிழர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளதுடன் 7 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு திருச்சூரில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

Advertisement

இச்சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக கூறப்படுகின்றது. விபத்தை ஏற்படுத்திய லொறி ஓட்டுநர் மற்றும் உதவியாளரை பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன