Connect with us

இலங்கை

வவுனியா குளத்தில் வான் பாயும் இடத்தில் போட்டி போட்டு மீன்களை பிடிக்கும் மக்கள்!

Published

on

Loading

வவுனியா குளத்தில் வான் பாயும் இடத்தில் போட்டி போட்டு மீன்களை பிடிக்கும் மக்கள்!

வவுனியாவில் உள்ள குளத்தின் வான் பாயும் இடத்தில் நீருடன் பெருமளவான மீன்களும் வருவதனால் அதனை போட்டி போட்டு மக்கள் பிடித்துச் செல்வதை அவதானிக்க முடிவதாக உள்ளது.

வவுனியாவில் அண்மைக் காலமாக பெய்து வரும் கடும் மழை காரணமாக பல குளங்கள் வான் பாய்ந்து வருகின்றது.

Advertisement

அதில் வவுனியா நகரையண்டியுள்ள பிரதான குளமான வவுனியா குளமும் வான் பாய்ந்து வருகின்றது.

குறித்த வான் பாயும் நீருடன் குளத்து மீனும் பெருமளவில் வருவதால் நுளம்பு வலை, மீன் வலை, துணி, வேட்டி என்பவற்றை கொண்டு வான் பார்க்க வரும் மக்களும் மீன்களை போட்டி போட்டு பிடிப்பதை அவதானிக்க முடிகிறது.

இதன்போது, கௌ சிலாப்பியா, யப்பான், விரால், கெளிறு போன்ற பெருமளவான மீன்கள் பிடிக்கப்படுவதுடன், அதனை பிடித்துச் செல்பவர்கள் மகிழச்சியில் செல்வதையும் அவதானிக்க முடிகிறது. 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன