Connect with us

இந்தியா

ஹெச். ராஜாவுக்கு எதிரான வழக்கு! நாளை தீர்ப்பு வழங்குகிறது சிறப்பு நீதிமன்றம்!

Published

on

ஹெச். ராஜாவுக்கு எதிரான வழக்கு! நாளை தீர்ப்பு வழங்குகிறது சிறப்பு நீதிமன்றம்!

Loading

ஹெச். ராஜாவுக்கு எதிரான வழக்கு! நாளை தீர்ப்பு வழங்குகிறது சிறப்பு நீதிமன்றம்!

பெரியார் சிலையை உடைப்பேன் எனவும், திமுக எம்.பி. கனிமொழி மீது விமர்சனம் செய்ததாகவும் தமிழக பா.ஜ.க. ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கில் நாளை சென்னை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளிக்கவுள்ளது.

Advertisement

பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பு குழு தலைவர் ஹெச். ராஜா கடந்த 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் பெரியார் சிலையை உடைப்பேன் என்று ட்விட்டரில் பதிவு செய்தது தொடர்பாகவும், திமுக எம்பி கனிமொழிக்கு எதிராக தரக்குறைவாக கருத்து கூறியதாகவும் பல்வேறு காவல் நிலையங்களில் தி.மு.க, காங்கிரஸ், பாப்புலர் பிராண்ட் ஆப் இந்தியா சார்பில் புகார்கள் அளிக்கப்பட்டன. இந்த புகாரில் ஈரோடு நகர் காவல் துறை, கருங்கல்பாளையம் காவல் நிலையத்தில் அளித்த புகாரில் ராஜாவுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஹெச். ராஜா தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்த சென்னை உயர்நீதிமன்றம் மூன்று மாதங்களில் இரண்டு வழக்கின் விசாரணையையும் முடிக்க சென்னை எம்.பி., எம்.எல்.ஏ. மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டது.

இதையடுத்து வழக்கு விசாரணை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி. ஜெயவேல் முன் நடைபெற்றது. பெரியார் சிலை உடைக்க வேண்டும் என கூறியதற்கான ஆதாரங்கள் சேகரிக்கப்படவில்லை எனவும், எம்.பி. கனிமொழி மீதான கருத்து அரசியல் ரீதியான கருத்து என்றும், அதிலும் அவர் புகார் அளிக்காத நிலையில், மூன்றாம் நபர் அளித்த புகாரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் வழக்கில் இருந்து விடுதலை செய்ய வேண்டும் எனவும் வாதிட்டார்.

Advertisement

இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு வழக்கின் தீர்ப்பை கடந்த மாதம் 14-ஆம் தேதி தள்ளி வைத்த நீதிபதி ஜெயவேல் நாளை இந்த இரண்டு வழக்குகளில் தீர்ப்பளிக்கிறார்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன