இலங்கை
தடம்புரண்ட முச்சக்கர வண்டி! ஒருவர் மருத்துவமனையில் அனுமதி

தடம்புரண்ட முச்சக்கர வண்டி! ஒருவர் மருத்துவமனையில் அனுமதி
திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் உள்ள தோப்பூர் சந்திக்கு அருகிலுள்ள வாய்க்காலில் முச்சக்கர வண்டி ஒன்று தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது. இன்று ஞாயிற்றுக்கிழமை (15) காலை இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
இதில் முச்சக்கர வண்டியில் பயணித்த பெண் ஒருவர் காயமடைந்து மூதூர் தள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.வெருகல் கோயிலுக்குச் சென்று திருகோணமலை நோக்கி செல்லும்போதுதே இவ்விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். (ஞ)