இலங்கை
புத்தளத்தில் லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு!

புத்தளத்தில் லொறி மோதி பாதசாரி உயிரிழப்பு!
புத்தளம், மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நல்லன்தலுவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக மதுரங்குளி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (08) இரவு இடம்பெற்றுள்ளது.
லொறி ஒன்று வீதியில் பயணித்த பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது படுகாயமடைந்த பாதசாரி புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் புத்தளம், நல்லன்தலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 33 வயதுடையவர் ஆவார்.
இதனையடுத்து, லொறியின் சாரதி சந்தேகத்தின் பேரில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மதுரங்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.