Connect with us

இலங்கை

யாழில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்; ஐவரிடம் தீவிர விசாரணை

Published

on

Loading

யாழில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிறந்த நாள் கொண்டாட்டம்; ஐவரிடம் தீவிர விசாரணை

   யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையில் நவம்பர் 26 ஆம் திகதி விடுதலைப் புலிகளின் தலைவர் பிறந்த தினக் கொண்டாட்டம் தொடர்பாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

அது தொடர்பில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் உள்ளிட்ட ஐந்து பேரிடம் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

Advertisement

விடுதலைப் புலிகளின் தலைவரின் இல்லத்தில் பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக விடுதலைப் புலிகளின் தலைவரின் புகைப்படத்தினை கொண்ட பதாகை ஒன்றும் அச்சிடப்பட்டு அங்கு காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இதன் போது அங்கு வந்திருந்த வல்வெட்டித்துறை பொலிஸார் விடுதலைப் புலிகளின் தலைவருடைய புகைப்படத்தினை பயன்படுத்த முடியாது என்றும், அதற்கு சட்டத்தில் இடமில்லை என்று தெரிவித்திருந்தனர்.

இதனையடுத்து குறித்த புகைப்படத்தினை மறைத்துவிட்டு பிறந்தநாள் கொண்டாட்டம் நடத்தப்பட்டது.

Advertisement

அதேவேளை விடுதலைப் புலிகளின் தலைவரது புகைப்படத்தை முகநூலில் பதிவிட்டதாக இணுவில் பகுதியைச் சேர்ந்த இளைஞரொருவர் பயங்கரவாத தடுப்பு பிரிவு பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞரை எதிர்வரும் 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

விடுதலைப்புலிகளின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகளை முகநூலில் பரப்பியமை தொடர்பில் மருதானை பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஒருவர், பத்தேகம பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர், பொரலஸ்கமுவ பகுதியைச் சேர்ந்த 50 வயதுடைய ஒருவர் மற்றும் யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியைச் சேர்ந்த 35 வயதுடைய வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.      

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன