இலங்கை
வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கல்!

வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சமைத்த உணவு வழங்கல்!
தொழிலதிபர் ஈ.எஸ்.பி.நாகரத்தின் நிதியுதவியில் , குருபரன் சுப்பிரமணியத்தின் கண்காணிப்பின் கீழ் வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்றையதினம் 500 உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.
ஈழத்துச் சிதம்பரத்தின் மாணிக்கவாசகர் மடத்தில் சமைக்கப்பட்ட உணவு, பொதிகளாக்கி பிட்டியல முன்பள்ளி, சுவாமி கோவிலடி, கோவளம், பெரியடைப்பு, சுன்னாகம், சிவன்கோவிலடி, மல்லிகையடி போன்ற இடங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டன.
நேற்று முன்தினம் ஆரம்பிக்கப்பட்ட இந்த பணியானது தொடர்ச்சியாக மூன்று நாட்களாக இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது. (ப)