இலங்கை
தொடருந்து கடவையில் கார் சிக்குண்டு விபத்து!

தொடருந்து கடவையில் கார் சிக்குண்டு விபத்து!
காலியில் தொடருந்து கடவையில், கார் ஒன்று தொடருந்துடன் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ் விபத்தானது,நேற்றைய தினம் இரவு இடம்பெற்றுள்ளது.
காலியில் இருந்து மாத்தறை நோக்கி பயணித்த கார் ஒன்று தொடருந்துடன் மோதியதிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் காரில் பயணித்த நால்வர் படுகாயமடைந்த நிலையில் காலி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன்
காலி – சுதர்மாராம கோவிலுக்கு அருகில் உள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையிலேயே இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த நால்வரில் இரண்டு சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.[ஒ]