Connect with us

இலங்கை

இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 22 வயது இளைஞன்

Published

on

Loading

இணையத்தள மோசடியில் ஈடுபட்ட 22 வயது இளைஞன்

  இணையத்தளம் மூலம் பண மோசடியில் ஈடுபட்ட சந்தேக நபர் ஒருவரை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நேற்று (05) கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் திகன பிரதேசத்தை சேர்ந்த 22 வயதுடையவர் ஆவார்.

Advertisement

சந்தேக நபர் சமூக வலைத்தளங்கள் ஊடாக அறிமுகமான நபரொருவரிடம் இணையத்தில் பணம் சம்பாதிக்கலாம் என கூறி 05 இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான பணத்தை மோசடி செய்துள்ளார்.

அது தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன