இலங்கை
நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனாவுக்கு பிணை!

நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனாவுக்கு பிணை!
நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் கௌசல்யா ஆகிய இருவரும் கடந்த 09ஆம் திகதி யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குள் அத்துமீறி உள் நுழைந்த முரண்பாட்டில் ஈடுபட்டிருந்த வழக்கு இன்றையதினம் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் மருத்துவர் அர்ச்சுனா சட்டத்தரணி கெளசல்யா ஆகிய இருவரையும் பிணையில் செல்ல யாழ்ப்பாணம் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனைக்குள் அத்துமீறி நுழைந்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போதோ நீதிமன்றம் பிணை வழங்கியது.
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் பணிப்பாளர் கலாநிதி த. சத்தியமூர்த்தியாலேயே குறித்த வழக்கு தாக்கு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. (ச)