இலங்கை
இவ்வாண்டில் 47ஆயிரத்து 291 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!

இவ்வாண்டில் 47ஆயிரத்து 291 பேர் டெங்கு நோயால் பாதிப்பு!
நாட்டில் இவ்வாண்டின் இதுவரையான காலப்பகுதிக்குள் 47ஆயிரத்து291 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகவும் 23 டெங்கு மரணங்கள் நிகழ்ந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற வானிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளது.
அதிகளவான டெங்கு நோயாளர்கள் கொழும்பு மாவட்டத்தில் இருந்து பதிவாகியுள்ள நிலையில் அவர்களின் மொத்த எண்ணிக்கை 11ஆயிரத்து942 ஆக பதிவாகியுள்ளது. (ப)