Connect with us

இலங்கை

எம்.பி அர்ச்சுனா உள்நுழைய வேண்டுமெனில் அனுமதி பெறவேண்டும்!!

Published

on

Loading

எம்.பி அர்ச்சுனா உள்நுழைய வேண்டுமெனில் அனுமதி பெறவேண்டும்!!

 யாழ்.போதனா வைத்தியசாலைக்கு நடாளும்ன்ற உறுப்பினர் இராமனாதன் – அர்ச்சுனா செல்ல வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அவர் முன் அனுமதி பெற வேண்டும் என யாழ் நீதவான் நீதிமன்றம் கூறியுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் நேற்று யாழ்.நீதிவான் நீதிமன்றத்தினால் 100,000 ரூபா பெறுமதியான சரீரப் பிணை வழங்கப்பட்டுள்ளதுடன்
குறித்த வழக்கு பிப்ரவரி 7, 2025 வரை ஒத்திவைக்கப்பட்டது.

Advertisement

இந்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அர்ச்சுனா செல்ல வேண்டுமெனில் வைத்தியசாலை நிர்வாகத்திடம் அவர் முன் அனுமதி பெற வேண்டும் எனவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

இந்த உத்தரவுக்கு இணங்க, வைத்தியசாலை நிர்வாகம், நோயாளியாக தவிர வேறு எந்த நோக்கத்திற்காகவும் வைத்தியசாலை வளாகத்திற்குள் அவர் நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என எம்.பி.யிடம் தெரிவித்துள்ளது.

அதேவேளை , உரிய அனுமதியின்றி உள்ளே செல்ல முற்பட்டால், யாழ்.பொலிஸாரிடம் எம்.பி.யை ஒப்படைக்குமாறு யாழ்.போதனா வைத்தியசாலை   பணிப்பாளர்,  வைத்தியசாலைப்   பாதுகாப்பு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக  குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement

அதோடு அவ்வாறான சந்தர்ப்பத்தில் பலவந்தப்படுத்தல் அல்லது துன்புறுத்தலில் ஈடுபடாமல் நிலைமையைக் கையாளுமாறும் பாதுகாப்பு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேவேளை யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளர் என்ற ரீதியில் மாத்திரமே அர்ச்சுனா உள்ளே அனுமதிக்கப்படுவார் என்றும், வேறு எந்த காரணத்திற்காகவும் அவர் உள்நுழைய முடியாது எனவும் யாழ் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் அலுவலகம் நாடாளுமன்ற உறுப்பினருக்கு அருச்சுனாவுக்கு அறிவித்துள்ளதாகவும்  கூறப்படுகின்றது

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன