இலங்கை
சபாநாயகர் இராஜினாமா குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு!

சபாநாயகர் இராஜினாமா குறித்து விசேட வர்த்தமானி வெளியீடு!
சபாநாயகர் பதவியில் இருந்து அசோக சபுமல் ரன்வல இராஜினாமா செய்ததற்கான விசேட வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.
அரசியலமைப்பின் 64(2) பிரிவின்படி, பாராளுமன்ற சபாநாயகர் அசோக சபுமல் ரன்வல சபாநாயகர் பதவியில் இருந்து கடந்த டிசம்பர் 13, 2024 முதல் இராஜினாமா செய்தமை குறிப்பிடத்தக்கது.