இலங்கை
தூக்கிய தொங்கியவாறு இளைஞனின் சடலம் மீட்பு – மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் தெரிவிப்பு!

தூக்கிய தொங்கியவாறு இளைஞனின் சடலம் மீட்பு – மரணத்தில் சந்தேகம் என உறவினர்கள் தெரிவிப்பு!
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட இணுவில் பகுதியில் தூக்கில் தொங்கிய நிலையில் இளைஞனின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
செட்டி வீதி, இணுவில் மேற்கு இணுவிலைச் சேர்ந்த 31வயதுடைய அமுதலிங்கம் நிவேதன் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது; குறித்த இளைஞன் வீட்டின் முன்புறம் உள்ள காணியில் நேற்றிரவு செவ்வாய்க்கிழமை(17) இருந்துள்ளார். இதன்போது இரவு உணவுக்காக அவரது தாயார் குறித்த இளைஞனை அழைத்துள்ளார். இதன்போது அவர் வருவதாக கூறியும் வீட்டுக்கு செல்லவில்லை. பின்னர் உறவினர்கள் தொலைபேசி மூலம் அழைப்பு மேற்கொண்ட வேளை அவரது கைப்பேசி உறக்க நிலையில் காணப்பட்ட்டுள்ளதாகவும், இந்நிலையில் அவர் இன்றையதினம் குறித்த காணியில் உள்ள மரம் ஒன்றில் தூக்கில் தொங்கியவாறு சடலமாக காணப்பட்டுள்ளதாகவும், அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் பொலிஸாரிடம் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.(ச)