Connect with us

இலங்கை

வெளிநாடு செல்வோரிற்கு எச்சரிக்கை!

Published

on

Loading

வெளிநாடு செல்வோரிற்கு எச்சரிக்கை!

   இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியக அதிகாரிகளின் புகைப்படங்களைப் பயன்படுத்தி வெளிநாடுகளில் வேலை வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பதாக கூறி, நிதி மோசடி செயற்பாடு இடம்பெறுவதாக வேலைவாய்ப்பு பணியகம் பொத்துமக்களை எச்சரித்துள்ளது.

தங்கள் பணியகத்தின் உயர் அதிகாரிகளின் புகைப்படங்களை பயன்படுத்தி வட்ஸ்அப் தொடர்புகளை உருவாக்கி இஸ்ரேலில் வேலை தருவதாக கூறி, இந்த நிதி மோசடி நடந்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

தமது பணியகத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் வெளியிடப்பட்ட புகைப்படங்களை தவறாக பயன்படுத்தி இந்த நிதி மோசடிகளில் ஈடுபடுவதாக இதுவரை பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.

எனவே, இவ்வாறான மோசடியாளர்களிடம் சிக்க வேண்டாம் என வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.

மேலும் இவ்வாறான மோசடி நடவடிக்கைகள் தொடர்பான தகவல்களை, பணியகத்தின் துரித தொலைபேசி இலக்கமான 1989 அல்லது 071 759 35 93 என்ற வட்ஸ்அப் இலக்கத்திற்கு வழங்குமாறு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன