Connect with us

இலங்கை

கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டு கான்ஸ்டபிள் காயம்!

Published

on

Loading

கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டு கான்ஸ்டபிள் காயம்!

   ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஓய்வு விடுதி ஒன்றில் கண்ணாடி போத்தலால் தாக்கப்பட்டு பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் காயமடைந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஹொரணை பிரதேசத்தில் வசிக்கும் முச்சக்கரவண்டி சாரதி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஹொரணை பொலிஸார் தெரிவித்தனர்.

Advertisement

மொரகஹஹேன பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரே காயமடைந்துள்ளார்.

காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் மதுபானம் அருந்துவதற்காக ஹொரணை பிரதேசத்தில் உள்ள ஓய்வு விடுதி ஒன்றிற்கு நேற்று (18) சென்றுள்ளார்.

இதன்போது முச்சக்கரவண்டி சாரதிக்கும் பொலிஸ் கான்ஸ்டபிளுக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது.

Advertisement

இதனால் கோபமடைந்த முச்சக்கரவண்டி சாரதி, கண்ணாடி போத்தல் ஒன்றினால் பொலிஸ் கான்ஸ்டபிளை தாக்கியுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹொரணை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன