சினிமா
ஒரு மணி நேரமா மனம்விட்டு பேசிய ஜெயம் ரவி, ஆர்த்தி.! சமரச பஞ்சாயத்தில் நடந்தது என்ன?

ஒரு மணி நேரமா மனம்விட்டு பேசிய ஜெயம் ரவி, ஆர்த்தி.! சமரச பஞ்சாயத்தில் நடந்தது என்ன?
பிரபல நடிகர் ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்ய உள்ளதாக சமீபத்தில் மிகப்பெரியஅதிர்ச்சியை கொடுத்து இருந்தார். அதன்படி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்திருந்தார்.இந்த நிலையில், ஜெயம் ரவி – ஆர்த்தி விவாகரத்து வழக்கு விசாரணை தொடர்பாக இன்றைய தினம் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி உள்ளார்கள்.d_i_aஇதன்போது ஜெயம் ரவி – ஆர்த்தி தம்பதிகளுக்கு இடையே சமரச பேச்சுவார்த்தை முடியடையவில்லை என்று மத்தியஸ்தர் தரப்பில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.மேலும் இந்த விவாகரத்து வழக்கு தொடர்பாக சமரச தீர்வு மையத்தில் இருவரும் மனம் விட்டு பேசுமாறு நீதிமன்ற உத்தரவு இட்டுள்ளது.இதை தொடர்ந்து ஜெயம் ரவி, ஆர்த்தி இருவரும் சமரச தீர்வு மையத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளார்கள். இதைத் தொடர்ந்து இந்த வழக்கின் மறு விசாரணை பதினெட்டாம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.