இலங்கை
நத்தார் தினத்தை முன்னிட்டு வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட தேவாலங்கள்!

நத்தார் தினத்தை முன்னிட்டு வண்ணமயமாக அலங்கரிக்கப்பட்ட தேவாலங்கள்!
உலகெங்கும் வாழும் கிருஸ்தவ மக்களால் ஜேசுபால பிறந்த தினமான நத்தார் தினம் ( டிசம்பர்25) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் புனித நத்தார் தினத்தை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் திருத்தலம் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்டு காணப்படுகின்றது.
இன்றிரவு கிருஸ்தவ தேவாலயங்களில் ஆராதனைகளும் இடம்பெறவுள்ளன. நாட்டிலுள்ள அனைத்து கிருஸ்தவ ஆலயங்களும் பாலன் பிறப்பை வரவேற்க வெகு விமரிசையாக அலங்கரிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை இலங்கையில் அமைந்துள்ள தேவாலயங்களுக்கு பாதுகாப்பும் பலப்பட்டுத்தப்பட்டுள்ளது.