Connect with us

இந்தியா

மீட்புக் கப்பலில் பிறந்த சுனாமி அதிசயக் குழந்தை; கடற்படையில் சேர விருப்பம்

Published

on

tsunami

Loading

மீட்புக் கப்பலில் பிறந்த சுனாமி அதிசயக் குழந்தை; கடற்படையில் சேர விருப்பம்

பி. குளோரியின் பிறப்புச் சான்றிதழைப் பார்த்த போது ஓர் ஆச்சரியம், அதிசயம் இருந்தது. அவர் பிறந்த இடமாக, ஹட் பே முதல் போர்ட் பிளேயருக்கு செல்லும் வழியில், ஐ.என்.எஸ் கரியல் என்று எழுதப்பட்டிருந்தது. பிறந்த தேதி டிசம்பர் 29, 2004.ஞாயிறு அன்று குளோரிக்கு 20 வயதாகிறது. ஹட் பே தீவில் (சிறிய அந்தமான்) பகுதியில் வாழ்ந்த குளோரியின் பெற்றோர் பி.பல்ராம் மற்றும் பி. லக்ஷ்மி வீடு மற்றும் கிராமம் டிசம்பர் 26, 2004 அன்று சுனாமியில் சிதைந்தது.  அப்போது ஒன்பது மாத கர்ப்பிணியான லக்ஷ்மி, தனது கணவரைப் பிடித்துக் கொண்டு, தண்ணீரிலிருந்து தங்களை பாதுகாத்துக் கொண்டு, பாதுகாப்பான இடமான அருகிலுள்ள மலையின் மீது ஏறிச் சென்றனர். “நாங்கள் அங்கே மூன்று நாட்கள் உணவு, தண்ணீர் என எதுவும் இல்லாமல் தங்கினோம். நான்காவது நாளில், INS Gharial ஒரு தேவதையைப் போல வந்தது. எங்கள் இருவரையும், என் அம்மா மற்றும் சகோதரியையும், அங்கு அடைக்கலம் தேடிய பலரையும் மீட்டுக் காப்பாற்றியது, ”என்று அந்த நேரத்தில் மீனவராக பணிபுரிந்த பல்ராம் நினைவு கூர்ந்தார்.”எப்படியோ, சிறிது தூரத்தில் நங்கூரமிட்டு இருந்த கப்பலுக்கு எங்களை அழைத்துச் சென்ற லைஃப் படகில் ஏறினோம்,” என்று 23 வயதாக இருந்த லக்ஷ்மி கூறினார். நான் கப்பலில் ஏறியதும், எனக்கு பிரசவ வலி ஏற்பட்டது என்று அவர் கூறினார்.தான் சந்தித்த முதல் மூத்த அதிகாரியிடம் தனது மனைவியின் உடல்நிலை குறித்து பல்ராம் கூறினார். அப்போது அவர்கள், “இப்போது நாங்கள் எல்லோரும் இருக்கிறோம் எல்லாம் சரியாகிவிடும் என்று அதிகாரி எனக்கு உறுதியளித்தார்” என்று பல்ராம் கூறினார்.கப்பல் போர்ட் பிளேரை நோக்கிப் பயணிக்கத் தொடங்கியதும், லக்ஷ்மியின் வலிகள் தீவிரமடைந்தன. கப்பலின் மருத்துவர், இத்தகைய சூழ்நிலைகளுக்குப் பயிற்றுவிக்கப்படாத ஒரு மோட்லி குழுவினரின் உதவி உடன், லக்ஷ்மிக்கு பிரசவம் பார்த்தார். டிசம்பர் 29, 2004 அன்று மாலை 7 மணிக்கு பெண் குழந்தையான பி.குளோரி வெற்றிகரமாகப் பிறந்தார் என்று கூறினர். கப்பல் அடுத்த நாள் போர்ட் பிளேயரை அடைந்ததும், குளோரியும் அவரது தாயும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர், மேலும் பால்ராமுக்கு அருகிலேயே தங்குமிடம் வழங்கப்பட்டது. “அரசாங்கம் எங்கள் வீட்டை மீண்டும் கட்டும் வரை நாங்கள் ஐந்து மாதங்கள் போர்ட் பிளேயரில் தங்கியிருந்தோம்” என்று பல்ராம் கூறினார்.இந்த அதிசயம் மற்றும் அழகான  நிகழ்வைக் குறிக்கும் வகையில், கடற்படை குளோரியை தத்தெடுப்பதாக அறிவித்தது. அவரின் கல்வி செலவை கவனித்துக்கொள்வதாக அறிவித்தது. பின்னர், கால கடந்த நிலையில்,  பல்ராமால் மீன்பிடித் தொழிலில் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டபோது, ​​கடற்படையினர் அவருக்கு அவரது கிராமத்தில் ஒரு வேலை ஏற்படுத்தி கொடுத்தது.கமாடோர் ஏ.வேணுகோபால் (ஓய்வு) ஐஎன்எஸ் கரியாலின் அப்போதைய கமாண்டிங் அதிகாரியாக இருந்தார். அவர் கூறுகையில், நான் குளோரி பிறந்ததை கடற்படை தலைமையகத்திற்கு தெரிவித்தேன். இந்த செய்தி விரைவில் அனைத்து கடற்படை கப்பல்கள் மற்றும் நிறுவனங்களுக்கும் தெரிவிக்கப்பட்டது. தலைமைத் தளபதி, அந்தப் குழந்தையை தத்தெடுத்து, அவளது கல்வியைக் கவனிக்கும்படி கடற்படைக்குக் கோரிக்கையை அனுப்பினார். அது உறுதி செய்யப்பட்டு இன்றுவரை தொடர்கிறது. அவர்களின் மீள்குடியேற்றத்திற்கு நாங்களும் உதவி செய்தோம். சில ஆண்டுகளுக்குப் பிறகு நான் பதவி உயர்வுக்காக அங்கு சென்றபோது நானும் அவர்களைப் பார்வையிட்டேன், ”என்று சுனாமி மீட்பு நடவடிக்கைகளுக்காக நவ் சேனா பதக்கம் வழங்கப்பட்ட வேணுகோபால் கூறினார்.குளோரிக்கு இப்போது இரண்டு இளைய உடன்பிறப்புகள் உள்ளனர் – 19 வயது சகோதரனும் 15 வயது சகோதரியும் உள்ளார்.“சிறுவயதில் இருந்தே, அந்தச் சூழ்நிலைகளில் இருந்து தப்பித்து, வளர்ந்து வரும் ஆண்டுகளில் இந்தியக் கடற்படையின் ஒரு பகுதியாக இருப்பது எவ்வளவு பாக்கியம் என்பதை நான் அறிந்திருக்கிறேன். அவர்கள் என்னை அடிக்கடி விழாக்களுக்கு அழைத்தார்கள், என்னைப் பாராட்டினார்கள், பேச மேடை கொடுத்தார்கள், ஒவ்வொரு ஆண்டும் என் பிறந்தநாளுக்கு வாழ்த்து சொன்னார்கள், எங்களுக்கு ஏதாவது தேவையா என்பதை அடிக்கடி கவனித்து கொண்டார்கள். நிச்சயமாக, என்னை முழுமையாக ஆதரித்தார்கள். எனது கல்வி செலவின் அனைத்து கட்டணங்களையும் செலுத்தினார்கள், ”என்று அவர் கூறினார்.இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, Glory JNRM கல்லூரியில் கணினி அறிவியலில் பட்டப்படிப்பை முடிக்க போர்ட் பிளேயருக்குச் சென்றார். பட்டம் பெற்ற பிறகு, இந்திய கடற்படையில் அதிகாரியாக சேர ஆசைப்படுகிறார். “நான் பட்டம் பெற்றவுடன், SSB (சேவைகள் தேர்வு வாரியம்) தேர்வில் கலந்துகொள்வேன், கடவுள் விரும்பினால், இந்திய கடற்படையில் சேருவேன். நன்றிக் கடனை அடைக்க எனக்கு தெரிந்த ஒரே வழி இதுதான், ”என்றார். ஆங்கிலத்தில் படிக்க:   Born on a rescue ship, tsunami miracle baby hopes to join Navy: ‘Want to repay the debt’

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன