Connect with us

இலங்கை

தமிழர் பகுதியொன்றில் இடம்பெற்ற பாரிய விபத்து.. பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

Published

on

Loading

தமிழர் பகுதியொன்றில் இடம்பெற்ற பாரிய விபத்து.. பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் இன்றையதினம் (31-12-2024) மாலை இடம்பெற்றுள்ளது.

Advertisement

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பாவற்குளம், படிவம் இரண்டு பகுதியில் சாரதி ஒருவர் பேருந்தை நிறுத்தி விட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுவதற்காக பேருந்தை செலுத்தியுள்ளார்.

இதன்போது, சைக்கிளில் பயணித்த 2 சிறுவர்கள் வீதியை கடக்க முற்பட்டபோது குறித்த பேருந்துடன் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.

Advertisement

குறித்த விபத்தில் சைக்கிளில் பயணித்த 7 வயதுடைய அப்துல் மஜித் உமர் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன