இலங்கை

தமிழர் பகுதியொன்றில் இடம்பெற்ற பாரிய விபத்து.. பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

Published

on

தமிழர் பகுதியொன்றில் இடம்பெற்ற பாரிய விபத்து.. பரிதாபமாக உயிரிழந்த சிறுவன்!

வவுனியாவில் இடம்பெற்ற விபத்து ஒன்றில் சிக்கி 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இச் சம்பவம் இன்றையதினம் (31-12-2024) மாலை இடம்பெற்றுள்ளது.

Advertisement

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா, பாவற்குளம், படிவம் இரண்டு பகுதியில் சாரதி ஒருவர் பேருந்தை நிறுத்தி விட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுவதற்காக பேருந்தை செலுத்தியுள்ளார்.

இதன்போது, சைக்கிளில் பயணித்த 2 சிறுவர்கள் வீதியை கடக்க முற்பட்டபோது குறித்த பேருந்துடன் சைக்கிள் மோதியதில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.

Advertisement

குறித்த விபத்தில் சைக்கிளில் பயணித்த 7 வயதுடைய அப்துல் மஜித் உமர் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த சிறுவனின் சடலம் வவுனியா மாவட்ட பொது வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

விபத்து சம்பவம் தொடர்பில் உளுக்குளம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version