Connect with us

உலகம்

வியத்தகு திருப்பத்தை கண்ட தென்கொரிய அரசியல் நெருக்கடி!

Published

on

Loading

வியத்தகு திருப்பத்தை கண்ட தென்கொரிய அரசியல் நெருக்கடி!

தென் கொரியாவின் அரசியல் நெருக்கடி இன்று வெள்ளிக்கிழமை (03) ஒரு வியத்தகு திருப்பத்தை எடுத்தது.

இராணுவச் சட்ட முயற்சியில் தோல்வியுற்றதற்காக குற்றஞ்சாட்டப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலை தடுத்து வைப்பதற்கான பிடியாணையை நிறைவேற்ற முயன்ற புலனாய்வாளர்கள் வெள்ளிக்கிழமை (03) ஜனாதிபதி இல்லத்திற்கு வெளியே ஜனாதிபதி பாதுகாப்பு சேவையுடன் மோதலில் ஈடுபட்டுள்ளனர்.

Advertisement

உயர்மட்ட அதிகாரிகளுக்கான ஊழல் விசாரணை அலுவலகத்தின் (CIO) புலனாய்வாளர்கள், மத்திய சியோலில் உள்ள ஹன்னம்-டாங்கில் உள்ள ஜனாதிபதி இல்லத்துக்கு வெளியே எதிர்பாளர்களை தாண்டி குற்றஞ்சாட்டப்பட்ட ஜனாதிபதி யூன் சுக் யோலை கைது செய்ய முயன்றனர்.

இதன்போதே அவர்கள் ஜனாதிபதி பாதுகாப்பு சேவை அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி பாதுகாப்பு சேவையின் தலைவர், கடந்த மாதம் யூன் இராணுவச் சட்டம் பற்றிய சுருக்கமான அறிவிப்பின் பேரில் அவர் மீது கைது பிடியாணை வழங்கிய போதிலும், புலனாய்வாளர்கள் வீட்டிற்குள் நுழைவதை அங்கீகரிக்க மறுத்ததாக கூறப்படுகிறது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன