Connect with us

பொழுதுபோக்கு

விஜயகாந்துடன் நடிக்கனுமா? வேண்டாம்: வாய்ப்பை மறுத்த ராமராஜன்; எந்த படம் தெரியுமா?

Published

on

Vijayakanth Ramarajan

Loading

விஜயகாந்துடன் நடிக்கனுமா? வேண்டாம்: வாய்ப்பை மறுத்த ராமராஜன்; எந்த படம் தெரியுமா?

தமிழ் சினிமாவில்,ரஜினிகாந்த் கமல்ஹாசன் படங்களுக்கு டஃப் கொடுக்கும அளவுக்கு வெற்றிப்படங்களை கொடுத்த நடிகர் ராமராஜன், விஜயகாந்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் அதனை மறுத்துள்ளார்.தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக இருந்து, ஒரு சில படங்களில் துணை கேரக்டரில் நடித்தவர் தான் ராமராஜன். 1978-ம் ஆண்டு வெளியான மீனாட்சி குங்குமம் என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமாக ராமராஜன், அடுத்து, தெருவிளக்கு, சிவப்பு மல்லி, சிவாஜி நடித்த சூரக்கோட்டை சிங்கக்குட்டி, சட்டத்தை திருத்துங்கள் உள்ளிட்ட பல படங்களில் துணை கேரக்டரில் நடித்திருந்தார்.1986-ம் ஆண்டு வெளியான நம்ம ஊரு நல்ல ஊரு என்ற படத்தின் மூலம் ராமராஜன் ஹீரோவாக அறிமுகமானார். இந்த படம் பெரிய வெற்றியை பெற்றிருந்தது. வி.அழகப்பன் என்பவர் இயக்கிய இந்த படத்தில், ராமராஜனுடன் ரேகா, ராஜீவ், சுலக்ஷனா, செந்தில், எஸ்.எஸ்.சந்திரன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். கங்கை அமரன் இசையமைத்த இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தை தொடர்ந்து. எங்க ஊரு பாட்டுக்காரன், வில்லு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், நம்ம ஊரு மாப்பிள்ளை, எங்க ஊரு காவல்காரன், எங்க ஊரு பாட்டுக்காரன், நம்ம ஊரு ராசா என தான் நடித்த பெரும்பாலான படங்களை கிராமத்து பின்னணியில் இருக்கும் வகையில் நடித்திருந்த ராமராஜன், அம்மன் கோயில் வாசலிலே, நம்ம ஊரு ராசா, கோபுர தீபம், விவசாயி மகன், உள்ளிட்ட சில படங்களை இயக்கியும் வெற்றி கண்டுள்ளார்.கடந்த 2001-ம் ஆண்டு சீறிவரும் காளை படத்தை இயக்கி நடித்திருந்த ராமராஜன், 11 வருடங்களுக்கு பிறகு மேதை என்ற படத்தில் நடித்திருந்தார். அதன்பிறகு 12 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஆண்டு வெளியான சாமானியன் என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. இப்படி பல வெற்றிப்படங்களை கொடுத்த ராமராஜன், விஜயகாந்துடன் இணைந்து நடிக்க மறுத்துள்ளார் என்பது பலரும் அறியாத ஒரு தகவல்.உதவி இயக்குனராக படங்களில் சிறுசிறு வேடங்களில் நடித்து வந்த ராமராஜனை நாயகனாக மாற்றியவர் இயக்குனர் வி.அழகப்பன். அவர் இயக்கிய நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் தான் ராமராஜன் முதல் முறையாக நாயகனாக அறிமுகமானார். இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து ஒரு படத்தை இயக்க வி.அழகப்பன் முடிவு செய்து ராமராஜனுக்கு போன் செய்துள்ளார்.ராமராஜன் அடுத்து ரெடியாக இருங்குள், நாம சிங்கப்பூர் போகிறோம். படத்தின் பெயர் பூமழை பொழிகிறது, ஹீரோயினாக நதியா நடிக்கறாங்க என்று சொன்னவுடன், ராமராஜான் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்ட நிலையில், படத்தில் விஜயகாந்த் நடிக்கிறார் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ராமராஜன், என்ன சார், நம்ம ஊரு நல்ல ஊரு படத்தில் நீங்களே என்னை நாயகனாக அறிமுகம் செய்துவிட்டு இப்போது 2-வது ஹீரோவாக நடிக்க சொன்னால் எப்படி என்று கேட்டுள்ளார்.இதை கேட்ட இயக்குனர் நீ சொல்வது சரிதான் நான் வேறு யாரையாவது நடிக்க வைக்கிறேன் என்று கூறியுள்ளார். அப்படி வெளியான பூமழை பொழிகிறது என்ற படத்தில், விஜயகாந்த் நதியாவுடன், ராமராஜன் நடிக்க வேண்டிய கேரக்டரில் நடிகர் சுரேஷ் நடித்திருந்தார். அதே சமயம் விஜயகாந்த் நடித்த சிவப்பு மல்லி என்ற படத்தில் ராமராஜன் ஒரு சிறு கேரக்டரில நடித்திருந்தார்.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன