Connect with us

இலங்கை

மருந்து பரிசோதனை ஆய்வகங்களை உருவாக்க அரசு அவதானம்!

Published

on

Loading

மருந்து பரிசோதனை ஆய்வகங்களை உருவாக்க அரசு அவதானம்!

எதிர்காலத்தில் மருந்துகளை பரிசோதிக்க பல ஆய்வகங்களை நிர்மாணிப்பதில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருவதாக சுகாதார அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.

கறுப்புப் பட்டியலில் உள்ள ஒரு நிறுவனத்தால் மருந்துகள் இறக்குமதி செய்யப்படுவதாக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த எதிர்பார்ப்பதாகவும் 

Advertisement

கண்டியில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய பல கேள்விகளுக்கு பதிலளிக்கும் விதமாக சுகாதார அமைச்சின் செயலாளர் இவ்வாறு தனது கருத்துக்களை தெரிவித்தார்.

“சுகாதார நிலைமைகள் மதிப்பிடப்படும் பல்வேறு நேரங்களில் இந்த சோதனைகள் செய்யப்பட வேண்டும்.”

ஆனால் முறைப்பாடுகள் இருந்தால் மட்டுமே நாங்கள் அதைத் தொடர்கிறோம். அது போதாது.

Advertisement

அரசாங்கம் இப்போது இலங்கையில் ஒன்று அல்லது இரண்டு ஆய்வகங்களை நிறுவுவதில் கவனம் செலுத்தியுள்ளது.

“இலங்கை ஒரு சிறிய நாடாக இருந்தாலும், இந்த சுகாதார அமைப்பு ஒரு அரச சுகாதார அமைப்பாக இருப்பதால் மற்றும் மருந்துகளின் விநியோகம் மையப்படுத்தப்பட்டிருப்பதலாலும்  கொள்முதல் செயல்முறை பல வளர்ந்த நாடுகளில் மருந்துகளின் கொள்முதல் செயல்முறையை விட பெரியது என்பதைக் குறிக்கிறது.” என்றார்.[ஒ]

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன