Connect with us

இந்தியா

பிறப்பின் அடிப்படையில் குடியுரிமையை ரத்து செய்த விவகாரம்: டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

Published

on

trump

Loading

பிறப்பின் அடிப்படையில் குடியுரிமையை ரத்து செய்த விவகாரம்: டிரம்பின் உத்தரவுக்கு தடை விதித்த அமெரிக்க நீதிமன்றம்

அமெரிக்கா அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற உடனேயே பல அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறார். அந்த வகையில் பிறப்பின் அடிப்படையில் குடியுரிமை வழங்கும் சட்டத்தை ரத்து செய்வதாக டொனால்ட் டிரம்ப் உத்தரவு பிறப்பித்தார்.இந்நிலையில், டொனால்ட் டிரம்பின் இந்த நிர்வாக உத்தரவுக்கு சியாட்டிலில் உள்ள நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. வியாழனன்று அமெரிக்க நீதிமன்றத்தின் மாவட்ட நீதிபதி John Coughenour இந்த தற்காலிக தடை உத்தரவை வழங்கியதை அடுத்து, நீதிமன்றம் பூர்வாங்க தடை உத்தரவை பரிசீலிக்கும் போது 14 நாட்களுக்கு கொள்கையை அமல்படுத்துவதை நிறுத்தியது.பிப்.20 முதல் பிறப்புசார் குடியுரிமை ரத்து செய்யப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டிருந்தார். பிறப்புரிமை அடிப்படையிலான குடியுரிமை ரத்து செய்வதாக டிரம்ப் அறிவித்ததை எதிர்த்து 22 மாகாணங்கள் வழக்கு தொடரப்பட்டது.அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதுகுடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனால் நியமிக்கப்பட்ட நீதிபதி கோஹெனோர், விசாரணையின் போது வார்த்தைகளைக் குறைக்கவில்லை, நிர்வாக ஆணை “அப்பட்டமானது, அரசியலமைப்பிற்கு விரோதமானது” என்று கூறினார்.”இந்த உத்தரவு அரசியலமைப்பிற்கு உட்பட்டது என்று நீதிமன்றத்தின் உறுப்பினர் எவ்வாறு சந்தேகத்திற்கு இடமின்றி கூற முடியும் என்பதைப் புரிந்துகொள்வதில் எனக்கு சிக்கல் உள்ளது,” என்று நிர்வாகத்தின் நிலைப்பாட்டை பாதுகாக்கும் நீதித்துறை வழக்கறிஞர் பிரட் ஷுமேட்டிடம் கோஹனோர் கூறினார். “இது என் மனதைக் குழப்புகிறது.” என்று நீதிபதி கூறினார்.ஆங்கிலத்தில் படிக்க:   US judge blocks Donald Trump’s bid to end birthright citizenship

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன