Connect with us

உலகம்

கரீபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு – ஆழிப்பேரலை எச்சரிக்கை!

Published

on

Loading

கரீபியன் கடலில் 7.6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நில அதிர்வு – ஆழிப்பேரலை எச்சரிக்கை!

கரீபியன் கடலில் நேற்று மாலை 7.6 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 
 
இந்த நில அதிர்வு 10 கிலோமீட்டர்கள் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
ஹோண்டுராஸ் வடக்கில் உள்ள கேமன் தீவுகளின் கடற்கரையிலிருந்து சுமார் 209 கிலோமீட்டர்கள் தொலைவில் நில அதிர்வு ஏற்பட்டது. 
 
இதையடுத்து பல நாடுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
ஆனால் அமெரிக்க அட்லாண்டிக் அல்லது வளைகுடா கடற்கரைகளில் ஆழிப்பேரலை எதிர்பார்க்கப்படவில்லை என்றும், புவேர்ட்டோ ரிக்கோ மற்றும் விர்ஜின் தீவுகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 
இதனிடையே நில அதிர்வினால் உருவான அபாயகரமான ஆழிப்பேரலை அலைகள், கேமன் தீவுகள், ஜமைக்கா, கியூபா, மெக்சிகோ, ஹோண்டுராஸ், பகாமாஸ், பெலிஸ், ஹைட்டி, கோஸ்டாரிகா, பனாமா, நிகரகுவா மற்றும் குவாத்தமாலா ஆகிய நாடுகளின் கடற்கரைகளில் மையப்பகுதியிலிருந்து 620 மைல்களுக்குள் ஏற்பட வாய்ப்புள்ளதாகப் பசிபிக் ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம் அறிவித்துள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன