Connect with us

உலகம்

எனக்கு மரண தண்டனை விதிக்க முயற்சி!

Published

on

Loading

எனக்கு மரண தண்டனை விதிக்க முயற்சி!

மத நிந்தனையில் ஈடுப்பட்டதற்காக கூறி பாகிஸ்தானில் தனக்கு மரண தண்டனை விதிக்கும் நிலை உருவானதாக மெட்டா நிறுவனர் மார்க் ஜுக்கர்பெர்க் தெரிவித்துள்ளார்.

மெட்டா நிறுவனத்தின் கீழ் இயங்கும் சமூக ஊடகமான பேஸ்புக்கில் யாரோ ஒருவரின் மத நிந்தனை பதிவுக்காக தன் மீது நடவடிக்கை எடுக்க முயற்சி நடந்தாக அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

பாட்காஸ்ட் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற மார்க் ஜுக்கர்பெர்க் பேசியதாவது,

பல்வேறு நாடுகளில் நாங்கள் உடன்படாத சட்டங்கள் உள்ளன. உதாரணமாக, பாகிஸ்தானில் ஒருவர் எனக்கு மரண தண்டனை பெற்றுத் தர முயன்றார்.

பேஸ்புக்கில் ஒரு நபர் நபிகள் நாயகத்தின் உருவம் என்று ஒன்றை வரைந்து பதிவிட்டார். அது தங்கள் கலாச்சாரத்தில் தெய்வ நிந்தனை என கூறி என் மீது வழக்குத் தொடரப்பட்டது. நான் பாகிஸ்தானுக்கு செல்லப் போவதில்லை, எனவே நான் அதைப் பற்றி அவ்வளவு கவலைப்படவில்லை என்று தெரிவித்தார்.

Advertisement

பல்வேறு நாடுகளில் உள்ளூர் விதிமுறைகள் மற்றும் கலாச்சார விழுமியங்களை மதித்து நடந்தும் அதே நேரம் கருத்து சுதந்திரத்தை உறுதி செய்வதும் சவாலானது என்று அவர் மேலும் .தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன