இந்தியா
சந்திரயான்-4′ விண்கலத்தை 2027-ம் ஆண்டில் ஏவ திட்டம்!

சந்திரயான்-4′ விண்கலத்தை 2027-ம் ஆண்டில் ஏவ திட்டம்!
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் நிலவில் இருந்து மண், கல், பாறைகள் அடங்கிய மாதிரிகளை ஆராய்ச்சிக்கு எடுத்து வர முடிவு செய்தனர்.
இதற்காக ‘சந்திரயான்-3’ திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘சந்திரயான்-4’ விண்கலத்தை தயாரித்து உள்ளனர். இந்த திட்டம் மூலம் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் மென்மையாக தரையிறங்கவும், நிலவின் மேற்பரப்பில் இருந்து மண், கல், பாறைகள் அடங்கிய மாதிரிகளைச் சேகரித்து ஆராய்ச்சிக்காக பூமிக்கு திருப்பி கொண்டுவருவதையும் நோக்கமாக கொண்டுள்ளது.
இதனை வருகிற 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
‘சந்திரயான்-4’ விண்கலம் 9 ஆயிரத்து 200 கிலோ எடை கொண்டதாகும். சந்திரயான்-3 திட்டம் போல் இல்லாமல், இந்த திட்டத்திற்கு ஆராய்ச்சி கருவிகளை 5 தொகுதிகளாக பிரித்து 2 ரொக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.
ஒரு ரொக்கெட்டில் 2 தொகுதிகளும், மற்றொரு ரொக்கெட்டில் 3 தொகுதிகளும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன.
ஏவும் பணிக்கு எல்.வி.எம்-3 மற்றும் பி.எஸ்.எல்.வி. ரொக்கெட்டுகள் ஒரு மாத இடைவெளியில் ஏவப்படுகிறது. ஒரே திட்டத்திற்கு 2 ரொக்கெட்டுகள் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.