இந்தியா

சந்திரயான்-4′ விண்கலத்தை 2027-ம் ஆண்டில் ஏவ திட்டம்!

Published

on

சந்திரயான்-4′ விண்கலத்தை 2027-ம் ஆண்டில் ஏவ திட்டம்!

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) விஞ்ஞானிகள் நிலவில் இருந்து மண், கல், பாறைகள் அடங்கிய மாதிரிகளை ஆராய்ச்சிக்கு எடுத்து வர முடிவு செய்தனர். 

இதற்காக ‘சந்திரயான்-3’ திட்டத்தின் வெற்றியை தொடர்ந்து, ‘சந்திரயான்-4’ விண்கலத்தை தயாரித்து உள்ளனர். இந்த திட்டம் மூலம் நிலவின் தென் துருவத்திற்கு அருகில் மென்மையாக தரையிறங்கவும், நிலவின் மேற்பரப்பில் இருந்து மண், கல், பாறைகள் அடங்கிய மாதிரிகளைச் சேகரித்து ஆராய்ச்சிக்காக பூமிக்கு திருப்பி கொண்டுவருவதையும் நோக்கமாக கொண்டுள்ளது. 

Advertisement

இதனை வருகிற 2027-ம் ஆண்டு விண்ணில் ஏவுவதற்கான பணிகளில் இஸ்ரோ விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

‘சந்திரயான்-4’ விண்கலம் 9 ஆயிரத்து 200 கிலோ எடை கொண்டதாகும். சந்திரயான்-3 திட்டம் போல் இல்லாமல், இந்த திட்டத்திற்கு ஆராய்ச்சி கருவிகளை 5 தொகுதிகளாக பிரித்து 2 ரொக்கெட்டுகள் மூலம் விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 

ஒரு ரொக்கெட்டில் 2 தொகுதிகளும், மற்றொரு ரொக்கெட்டில் 3 தொகுதிகளும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளன. 

Advertisement

ஏவும் பணிக்கு எல்.வி.எம்-3 மற்றும் பி.எஸ்.எல்.வி. ரொக்கெட்டுகள் ஒரு மாத இடைவெளியில் ஏவப்படுகிறது. ஒரே திட்டத்திற்கு 2 ரொக்கெட்டுகள் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன

அதிகம் படித்தது

Exit mobile version