Connect with us

உலகம்

பாப்பரசரின் நிலை! கவலைக்கிடம்

Published

on

Loading

பாப்பரசரின் நிலை! கவலைக்கிடம்

பாப்பரசர் பிரான்ஸிஸின் உடல்நிலை தொடர்ந்தும் கவலைக்கிடமாக உள்ளது என்று கத்தோலிக்க திருச்சபை அறிவித்துள்ளது.

சுவாசிப்பதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்ட பாப்பரசர் பிரான்ஸிஸ் கடந்த 14ஆம் திகதி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். ஆரம்பத்தில் நுரையீரல் அழற்சிக்காகவே அவர் மருத்துவமனையில்; சேர்க்கப்பட்டுள்ளார் என்று தகவல்கள் வெளியாகியிருந்தன. எனினும், பரிசோதனையின் போது அவருடைய இரண்டு நுரையீரல்களிலும் நிமோனியாத் தொற்று ஏற்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டது.

Advertisement

அவருக்குத் தொடர்ச்சியான சிகிச்சைகள் வழங்கப்பட்டாலும், வயது மூப்புக் காரணமாக அவருடைய உடல்நிலையில் பெரும் பின்னடைவு ஏற்பட்டதைத் தொடர்ந்து, தற்போது பாப்பரசர் கவலைக்கிடமாக உள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பாப்பரசரின் கையொப்பமிடப்பட்டு நேற்றையதினம் சிறப்பு அறிக்கையொன்றை வத்திக்கான் வெளியிட்டுள்ளது. ‘என் எண்ணங்கள் அப்பாவி உக்ரைனியர்களுடன் உள்ளன. அவர்களின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உலகத் தலைவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். உக்ரைனில் விரைவாக அமைதி திரும்ப வேண்டும்’ என்று அந்த அறிக்கையில் பாப்பரசர் பிரான்ஸிஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேவேளை, திருத்தந்தை காலமாகிவிட்டார் என்று நேற்றுமாலை ஊடகங்களில் செய்திகள் பரவின. அவற்றை வத்திக்கான் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன