Connect with us

இலங்கை

வரிகள் தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார விடுத்த உத்தரவு

Published

on

Loading

வரிகள் தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார விடுத்த உத்தரவு

வசூலிக்க வேண்டிய அனைத்து வரி வருவாய்களையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகளுக்கு இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

Advertisement

இந்த ஆண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் இலக்கு வருவாயை நிறைவு செய்வதற்கான உத்திகள் குறித்து இங்கு விரிவாக விவாதிக்கப்பட்டது.

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்திற்கு கிடைக்காத வருவாயை பெறுவதற்கு தற்போது நடைமுறையில் உள்ள முறையை விட தலையீட்டின் அவசியம் உள்ளதாக சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அனுர குமார , உள்நாட்டு இறைவரித் திணைக்களம் வசூலிக்க வேண்டிய அனைத்து வரி வருவாய்களையும் வசூலிக்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.

இந்த சந்திப்பில் ,தொழிலாளர் அமைச்சர் மற்றும் பொருளாதார மேம்பாட்டு துணை அமைச்சர் டாக்டர் அனில் ஜெயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதி செயலாளர் டாக்டர் நந்திக சனத் குமாரநாயக்க, நிதி அமைச்சக செயலாளர் மஹிந்த சிரிவர்தன, ஜனாதிபதியின் மூத்த கூடுதல் செயலாளர் ரசல் அப்போன்சு மற்றும் உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் பதில் ஆணையாளர் ஜெனரல் ஆர்.பி.எச். பெர்னாண்டோ உள்ளிட்ட உள்நாட்டு இறைவரித் திணைக்கள அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன