Connect with us

இலங்கை

கட்டைக்காட்டில் இடம்பெற்ற மனைப்பொருளியல் டிப்ளோமா கண்காட்சி!

Published

on

Loading

கட்டைக்காட்டில் இடம்பெற்ற மனைப்பொருளியல் டிப்ளோமா கண்காட்சி!

வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் அனுசரணையுடன் வடமாட்சி கிழக்கு பிரதேச செயலக மகளிர் அபிவிருத்தி நிலையத்தினால் நடாத்தப்படும் மனைப்பொருளியல் டிப்ளோமா கண்காட்சி இன்று புதன்கிழமை(12) கட்டைக்காட்டில் இடம்பெற்றது.

வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு மரியாள் மண்டபத்தில் முற்பகல் 09.30 மணியளவில் மருதங்கேணி பிரதேச செயலகத்தின் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி. வைகுந்தன் விமலராணி தலைமையில்  நிகழ்வு ஆரம்பமானது.

Advertisement

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தின் பிரதேச செயலர் கு.பிரபாகரமூர்த்தி பிரதம விருந்தினராக கலந்து கொண்டு கண்காட்சியை ஆரம்பித்துவைத்தார்.

குறித்த கண்காட்சியில் பயிலுனர்களின் ஆக்கத்திறன்களான தையல்வேலை,கைவேலை,பின்னல்வேலை,பெயின்ரிங்வேலை,மலர் ஒழுங்கமைப்பு, கேக் ஐசிங், சாரி வேலை உட்பட பல்வேறு ஆக்கத்திறன்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டதுடன் பயிலுனர்களுக்கான சான்றிதழ்கள் வழங்கி கெளரவிக்கப்பட்டதுடன் மாணவர்களின் கலை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன