Connect with us

இலங்கை

பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களில் அரசியல்வாதிகள்: பிரதமரிடம் சபையில் கேள்வி

Published

on

Loading

பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களில் அரசியல்வாதிகள்: பிரதமரிடம் சபையில் கேள்வி

பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களில் அரசியல்வாதிகள் கலந்து கொள்வதைத் தடை செய்யும் சட்டம் எதையும் தான் விதிக்கவில்லை என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். 

அரசியல் நோக்கங்களுக்காகப் பாடசாலை முறையைப் பயன்படுத்துவதை அரசியல்வாதிகள் தவிர்க்க வேண்டும் என்று மட்டுமே தான் கூறியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

நாடாளுமன்றத்தில் வைத்து நேற்றைய தினம் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார். 

பிரதமரின் தடையை மீறி ஆளும் கட்சி அரசியல்வாதிகள் பாடசாலைகளில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக கூறியதற்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அப்படியென்றால் ஆளும்கட்சிக்கு ஒரு நியாயம் எதிர்கட்சிக்கு ஒரு நியாயமா என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன் என சானக்க தெரிவித்தார்.

Advertisement

அதற்கு பதிலளித்த பிரதமர் “நான் அவ்வாறு தடை விதிக்கவில்லை. அப்படி எந்த சட்டமும் இல்லை. அந்த ஊடக அறிக்கை தவறானது” என்றார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன