இலங்கை
காத்தான்குடி மீடியா போரத்தின் இன நல்லிணக்க இப்தார் நிகழ்வு!!

காத்தான்குடி மீடியா போரத்தின் இன நல்லிணக்க இப்தார் நிகழ்வு!!
காத்தான்குடி மீடியா போரத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை(13) தலைவா் எம்.எஸ்.எம். நூா்தீன் தலைமையில் காத்தான்குடி கடற்கரை வீதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.
மேற்படி இப்தாா் நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல் திணைக்களத்தின் அதிகாரி வடிவேல் ஜீவானந்தன் மற்றும் இமாஸா ஹாட்வெயார் உரிமையாளர் ஏ.ஜி.எம். அஜ்வத், கிழக்கு தமிழ் ஊடக இல்லத்தின் செயலாளர் சாமஸ்ரீ தேசமான்ய உ.உதயகாந்த் (JP) உள்ளிட்டோர் விசேட விருந்தினராக கலந்து கொண்டிருந்ததுடன் காத்தான்குடி மற்றும் மட்டக்களப்பு பிரதேசங்களைத் தளமாகக் கொண்டியங்கும் தமிழ் மற்றும் முஸ்லிம் ஊடகவியலாளா்களும் கலந்து கொண்டனா்.
இன நல்லுறவு, ஊடகவியலாளர்களுக்கு இடையிலான, புாிந்துணா்வை வலுப்படுத்தும் நோக்கில் மேற்படி இப்தாா் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.