Connect with us

இலங்கை

சஞ்சீவ கொலை தொடர்பில் பூஸா சிறைச்சாலையின் அதிகாரி ஒருவர் கைது!

Published

on

Loading

சஞ்சீவ கொலை தொடர்பில் பூஸா சிறைச்சாலையின் அதிகாரி ஒருவர் கைது!

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த கணேமுல்ல சஞ்சீவ என அழைக்கப்படும் சஞ்சீவ குமார சமரத்ன என்பவர் கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்குள் வைத்து கடந்த பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி சுட்டுக் கொல்லப்பட்ட  சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறைச்சாலை அதிகாரி வாக்குமூலம் வழங்குவதற்காக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவுக்கு நேற்றைய தினம் மாலை சென்றிருந்த போதே கைது செய்யப்பட்டுள்ளார்.

Advertisement

காலி அக்மீமன பிரதேசத்தில் வசிக்கும் 48 வயதுடைய பூஸா சிறைச்சாலையின் அதிகாரி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சிறைச்சாலை அதிகாரி சம்பவத்தன்று, கணேமுல்ல சஞ்சீவவை கொழும்பு புதுக்கடை நீதிமன்றத்துக்கு சிறைச்சாலை பேருந்தில் அழைத்துச் சென்ற சிறைச்சாலை அதிகாரிகளை திருப்பி அனுப்புவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, சந்தேக நபரான சிறைச்சாலை அதிகாரி நேற்றைய தினம் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Advertisement

கணேமுல்ல சஞ்சீவ படுகொலை தொடர்பில் இதுவரை 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்பு பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினர் தெரிவித்தமை சுட்டிக்காட்டத்தக்கது.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன