Connect with us

இலங்கை

காசநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் வவுனியாவில் முன்னெடுப்பு!

Published

on

Loading

காசநோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் வவுனியாவில் முன்னெடுப்பு!

காச நோய் தொடர்பான விழிப்புணர்வு ஊர்வலம் இன்று வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டது.

வவுனியா, மருத்துவனை உள்வட்ட வீதியில் அமைந்துள்ள வவுனியா மாவட்ட மார்பு நோய் சிகிச்சை நிலையத்தில் ஆரம்பமான இந்த விழிப்புணர்வு ஊர்வலம் யாழ். வீதி, மருததுவமனை சுற்றுவட்ட வீதி, கண்டி வீதி, மணிக்கூட்டு கோபுர சந்தி, பசார் வீதி, ஹொரவப்பொத்தானை வீதி ஊடாக சென்று ம்ருத்துவமனையை அடைந்தது.

Advertisement

இதன்போது, காச நோயை கட்டுப்படுத்துவது தொடர்பான அறிவுறுத்தல்கள் அளிக்கப்பட்டதோடு, விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்களும் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன. 

இந்த ஊர்வலத்தில் தாதியர்கள், நூற்றுக்கு மேற்பட்ட முச்சக்கரவண்டிகள் இணைந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது. 
 

Advertisement
Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன